நாமாவளி -
1
வடிவேலா
வடிவேலா வள்ளி மணாளனே வடிவேலா
பக்தனைக்காக்கும்
பரம தயாளா 
பரவசமூட்டும்  எழில் வடிவேலா                      (வடி)
முருகா
உன்னையே ஒரு கணமே 
உருகி
நினைத்தால் போதாதா 
விரைவாய்
வருவாய் மயில் மீதினிலே 
தருவாய்
வரமே அருள்வாய் குருவாய்            (வடி) 
தமிழே
உருவாய் வந்தோனே 
தஞ்சம்
உனையே அடைதேனே 
விரைவாய்
வருவாய் மயில் மீதினிலே 
தருவாய்
வரமே அருள்வாய் குருவாய்            (வடி) 
உருவாய்
அருவாய் வந்தோனே 
தருவாய்
நின்றாய் தகையோனே 
விரைவாய்
வருவாய் மயில் மீதினிலே 
தருவாய்
வரமே அருள்வாய் குருவாய்            (வடி) 
நாமாவளி –
2 
கந்தனும்
வந்தான் கந்தனும் வந்தான் 
            கார்மயில் மீதினிலே 
வந்தவன்
தந்தான் வாழ்வினில் இன்பம் 
            எந்நாளும் வாழ்ந்திடவே                     (கந்த)
சொந்தமாய்
வந்தான் சோதனை தந்தான் 
            சுகமுடன் வாழ்ந்திடவே 
ஸுந்தர
ரூபன் அந்தரி பாலன் 
            செந்தில்நகர் வேலன்                          (கந்த)
தந்தைக்கு
மந்த்ரம் உபதேசம் செய்தவன் 
            ஸ்வாமிமலை நாதன் 
தந்தையும்
தாயுமாய் சந்ததம் காப்பான் 
            தணிகை மலை வேலன் – எங்கள் 
            தணிகை மலை வேலன்                      (கந்த)
முத்தமிழால்
இங்கு வைதாரையும் அவன் 
            வாழவைக்கும் தெய்வம் 
முந்தைய
வினைகள் வேரரருப்பான் எங்கள் 
            முத்துக்குமர தெய்வம்                         (கந்த)
சிங்கார
வள்ளியும் தேவ குஞ்சரியும் 
            பக்கத்தில் நின்றிடவே                        
சங்கடம்
தீர்த்திங்கு சஞ்சலம் மாய்ப்பவன் 
            சோலைமலை வேலன்                        (கந்த)
அரோஹரா
என்று அடியார்கள் கூப்பிட 
            ஆடியோடி வருவான்                          
அருக்காத
செல்வங்கள் தவராதளிப்பவன் 
            ஆவினன்குடி ஆண்டி                         (கந்த)
