Sunday 5 January 2014

பாராட்டி சில குறள் வெண்பாக்கள்

உயர்திரு M K மாமா அவர்கள் கீதைக்கு 700 கவி புனைந்துள்ளார். பாராட்டுக்குரிய இச்செயலை பாராட்டி சில குறள் வெண்பாக்கள் இயற்றியுள்ளேன். 

தொடர்க அவர் பணி. – நாக சுந்தரம்

1. தமிழில் கவியை தரமாய் படைக்கும்
  உவந்து உரைத்தேன் சிறப்பு

2. குருவிடம் அன்பும்  வணங்கிடும் பாங்கும்
  தரணி தருமே திடம்                    

3. கருணை கவியதை காதில் கொடுத்து
  அருளை பெறும் பாங்கு  

4. இறைவன் புகன்ற இனிய கவியை (கீதை)
  மறைவாய் மொழிந்த அழகு

5. குருமுகம் பார்த்து குளிர்ந்திடும் உள்ளம்  
  அருளை பெறும் ஆங்கு

7. இனிய கவிதை இனியும் இயற்ற
  முனிய மனம் நோக்கு



No comments:

Post a Comment